Pages

Monday, December 3, 2012

"ஆகிடு"

ஓர் கவிதையை வடித்திட - நீ 
கற்பனைக்கதவினை திறந்திடு 
ஓர் சாதனை படைத்திட - நீ 
பல கஷ்டங்கள் பட்டிடு 

அன்பினில் திளைத்திட - மற்றோருக்கு 
உன் நேசத்தை நீ கொடு 
பார்போற்ற மிளிர்ந்திட - நீ 
பண்புடனே திகழ்ந்திடு 

இன்பத்தை அருந்திட - நீ 
துன்பத்தை சகித்திடு 
மானுடனாய் திகழ்ந்திட - நீ 
மாண்போடு வாழ்ந்திடு 

வாழ்வின் உயர் இலக்கினை அடைந்திட 
இப்படி நீ ஆகிடு. 
 நீலா.


No comments:

Post a Comment