ஓர் கவிதையை வடித்திட - நீ
கற்பனைக்கதவினை திறந்திடு
ஓர் சாதனை படைத்திட - நீ
பல கஷ்டங்கள் பட்டிடு
அன்பினில் திளைத்திட - மற்றோருக்கு
உன் நேசத்தை நீ கொடு
பார்போற்ற மிளிர்ந்திட - நீ
பண்புடனே திகழ்ந்திடு
இன்பத்தை அருந்திட - நீ
துன்பத்தை சகித்திடு
மானுடனாய் திகழ்ந்திட - நீ
மாண்போடு வாழ்ந்திடு
வாழ்வின் உயர் இலக்கினை அடைந்திட
இப்படி நீ ஆகிடு.

No comments:
Post a Comment