நான் கடந்து வந்த காலத்தை திரும்பிப்பார்த்தேன் - அது
இன்ப துன்ப நினைவுகளோடு இறந்துவிட்டது
நான் நிகழுகின்ற காலத்தை நினைத்துப்பார்த்தேன் - அது
நிதானமாக சிந்தித்துச்செயற்படென்றது
மலரப்போகும் காலத்தை நான் மனதில் கொண்டேன் - அது
வரப்போகும் சவால்களை எதிர்கொள் என்றது
ஏன் காலம் என்பது மானிடரை ஆட்டிவைக்குது?
அது காலகாலமாக நம் வாழ்வை ஆட்சிசெய்யுது.
நீலா
