Pages

Monday, December 3, 2012

சோகம்

சோகம் நம் விசித்திர வாழ்வின் 
ஒரு பாகம் 
ஆமை போல வேகமின்றி மனதைவிட்டு 
விலகிட தயங்கிடும் 
பாவம்! என்று இரங்கவைக்கும் 
நவரசத்தில் ஓர் இரசம் 
மனதில் இருள் பெருக்கி 
பிணமாய் உலவ வைக்கும் இயந்திரம் 
இலாபமே இல்லாத துக்கத்தில் 
கிடைத்திடும் ஊதியம். 

நீலா.

"ஆகிடு"

ஓர் கவிதையை வடித்திட - நீ 
கற்பனைக்கதவினை திறந்திடு 
ஓர் சாதனை படைத்திட - நீ 
பல கஷ்டங்கள் பட்டிடு 

அன்பினில் திளைத்திட - மற்றோருக்கு 
உன் நேசத்தை நீ கொடு 
பார்போற்ற மிளிர்ந்திட - நீ 
பண்புடனே திகழ்ந்திடு 

இன்பத்தை அருந்திட - நீ 
துன்பத்தை சகித்திடு 
மானுடனாய் திகழ்ந்திட - நீ 
மாண்போடு வாழ்ந்திடு 

வாழ்வின் உயர் இலக்கினை அடைந்திட 
இப்படி நீ ஆகிடு. 
 நீலா.