Pages

Tuesday, July 10, 2012

காலம்

நான் கடந்து வந்த காலத்தை திரும்பிப்பார்த்தேன் - அது 
இன்ப துன்ப நினைவுகளோடு இறந்துவிட்டது 
நான் நிகழுகின்ற காலத்தை நினைத்துப்பார்த்தேன் - அது 
நிதானமாக சிந்தித்துச்செயற்படென்றது 
மலரப்போகும் காலத்தை நான் மனதில் கொண்டேன் - அது 
வரப்போகும் சவால்களை எதிர்கொள் என்றது 

ஏன் காலம் என்பது மானிடரை ஆட்டிவைக்குது?
அது காலகாலமாக நம் வாழ்வை ஆட்சிசெய்யுது. 


நீலா 

No comments:

Post a Comment