பசுமை நிறைந்த குடும்பம் - அது
பாசப்பிணைப்பின் உச்சம்
இனிமை என்றும் திகழும் - அதில்
தானே வாழ்கை சிறக்கும்
இன்ப துன்பம் சகஜம் - அதில்
கோப தாபம் ஜனனம்
அன்பு கொண்டு அணைத்தால்
எங்கும் பரவசமே பரவும்
குறும்புத்தனம் புரியும்
சிறுவர்களின் பருவம்
அரும்பி வரும் மழலை மொழி
அருந்திடவே ஆசை
அனுபவத்தால் முதிர்ச்சி கண்ட
பெரியோரின் மகிழ்ச்சி - அதில்
ஆசி பெரும் அனைவருக்கும்
மனதில் என்றும் திருப்தி
மண்ணில் மலரும் மலர்கள் - அவை
மாணிக்கங்கள் தானே
சில குடும்பச்சூழ்நிலைகளினால்
வாழ்வு கேள்விக்குறி தானே
வண்ண வண்ண மலருடன்
கூடிப்பிறந்தது தான் சுகந்தம்
இன்ப துன்ப உணர்வில் என்றும்
கலந்தது தான் குடும்பம்
அதனால் ...
குடும்பம் ஒரு கதம்பம் - அது
வாழ்வின் சுவை உணர்த்தும்.
நீலா



