Pages

Friday, December 30, 2011

குடும்பம் ஒரு கதம்பம்

பசுமை நிறைந்த குடும்பம் - அது 
பாசப்பிணைப்பின் உச்சம் 
இனிமை என்றும் திகழும் - அதில் 
தானே வாழ்கை சிறக்கும் 

இன்ப துன்பம் சகஜம் - அதில் 
கோப தாபம் ஜனனம் 
அன்பு கொண்டு அணைத்தால்
எங்கும் பரவசமே பரவும் 

குறும்புத்தனம் புரியும் 
சிறுவர்களின் பருவம் 
அரும்பி வரும் மழலை மொழி 
அருந்திடவே ஆசை 

அனுபவத்தால் முதிர்ச்சி கண்ட 
பெரியோரின் மகிழ்ச்சி - அதில் 
ஆசி பெரும் அனைவருக்கும் 
மனதில் என்றும் திருப்தி 

மண்ணில் மலரும் மலர்கள் - அவை 
மாணிக்கங்கள் தானே 
சில குடும்பச்சூழ்நிலைகளினால்
வாழ்வு கேள்விக்குறி தானே 

வண்ண வண்ண மலருடன் 
கூடிப்பிறந்தது தான் சுகந்தம் 
இன்ப துன்ப உணர்வில் என்றும் 
கலந்தது தான் குடும்பம் 


அதனால் ...




குடும்பம் ஒரு கதம்பம் - அது 
வாழ்வின் சுவை உணர்த்தும். 



நீலா

Tuesday, December 13, 2011

வாழ்க்கை

வாழ்வில் நீ தேடவேண்டியது இலக்கை 
அதை அடைய உனக்குத்தேவை தன்நம்பிக்கை 
துன்பங்களால் கிடைப்பது அழுகை - அதை 
துடைத்திடும் தன்நம்பிக்கை தான் உன் வலக்கை 

வாழ்க்கையின் மேடையில் நீ ஒரு நடிகை 
நீ சந்திக்கும் சவால்கள் தான் நாடக ஒத்திகை 
விரக்தியின் விளிம்பிலே காட்டதே வெறுப்பை 

ஏனென்றல் .....

இவ் அனைத்தும் நிறைந்தது தான் வாழ்க்கை. 



நீலா

Friday, September 30, 2011

இயற்கையின் விந்தைதான் என்னே!!!

சில்லென்ற தென்றல் தழுவிச்செல்ல
  சிங்காரமாய் வண்டுகள் ரீங்கரிக்க
புள்ளினக்கூட்டமெல்லாம் குதூகலிக்க
  புதுக்காலையில் வருகிறான் கதிரவனே


ஆவினக்கன்றுகள் துள்ளிச்செல்ல
  ஆனந்தமாய் அருவிகள் சலசலக்க
கணீர் என்ற மணியொலி சூழ்ந்துகொள்ள
  கதிரவன் கரங்களைப்பரப்புகிறான்





பச்சை வயலது பரந்திருக்க - அதில்
  இச்சையாய் மழைத்துளி குடியிருக்க
சுகந்தம் பரப்பிடும் மலர்களெல்லாம்
  சுதந்திரமாகவே தலையசைக்க


பட்டாடை அணிந்த சிட்டுக்கள் போல
  பறந்து செல்லும் சிறுவர் கூட்டம்
மிட்டாயைவிட இயற்கையை இரசிக்கும் - அவர்
  இரசனைக்கு நிகர் வேறேதும் இல்லை


மங்கையர் மலர்சூடி மணிவிளக்கேற்றி
  மங்கலமாய் மஞ்சளும் நெற்றியில் சூடி
பஞ்சமே இல்லாத பசுமை மண்ணின் 
  நெல்மணிகளை அன்னமாய் மாற்றுதல் காணீர்


அல்லும் பகலும் அயராது உழைக்கும்
    மானிடப்பிறவியர் மனதுக்கு இனிமை
இறைவன் அளித்த இயற்கைக்கொடைகளை
     அள்ளிப்பருகும் விந்தைதானே !!!






நீலா








Saturday, September 10, 2011

இதய ஆதங்கத்தில் இருந்து...

இனிய காலைப்பொழுதின்
விடியலை இரசிக்கும் முன்பே
அழுகுரல்கள் கேட்கிறது என் தாய் மண்ணில்.


தலைவிதிப்படி பிறந்துவிட்டோம்
என்பதற்காய் வாழ்ந்து வந்த வேளையிலும்
எனக்குள்ளே எதிர்கால
இலட்சியம் ஒன்றிருந்தது.


தாய் தந்தை வளர்த்த வளர்ப்பிலே
இலட்சிய தாகமும் சேர்ந்தே இருந்தது.
மரணத்தின் விளிம்புகளைக்கடந்துகொண்டிருந்தபோதும்
என் இலட்சியம் நிறைவேறிவிடவேண்டுமென்ற வேகமே மீதமிருந்தது.


ஆனால் இப்போது...


பூமிப்பந்தின் வேறொரு புள்ளியில்
நின்றுகொண்டிருக்கும் எனக்கு
கல்வி கற்க வாய்ப்புக்கள்தானுண்டு.


இலட்சியத்தை தொடும் வேகமும் தாகமும்
தாராளமாகவே என்னிடமுள்ளதால்
இலக்கினை அடைந்துவிடும் 
நம்பிக்கையும் நிறையவே உண்டு.


ஆயினும்,


வைத்தியத்துறைத்தொண்டினை செய்திட
தாய்மண்ணும் என்னருகில் இல்லை, 
உணர்வுகளைத்தொலைத்துவிட்ட
உறவுகளும் தானில்லை.


எனினும்...


என் ஆசை நிறைவேறத்துடிக்கின்றவளாய் என்றும்...






நீலா

Tuesday, September 6, 2011

அகரவரிசையில் என் அம்மாவுக்கு...

ன்னையெனும் உறவில்...
   ஆவலுடன் என்னை ஈன்றெடுத்து...
னிய அன்பையும்...
   ஈடற்ற பண்பையும்...
யிருக்கும் மேலான ஒழுக்கத்தையும்...
   ஊட்டி வளர்த்த அம்மாவிற்கு,
ன்னால் இயன்றவரை...
   ஏற்றமதை வாழ்வில் தருவேனென...
யம் ஏதுமின்றி - நான்
   ஒப்புக்கொள்ளுகிறேன்.
ர் எல்லையற்ற அன்புடன்,
   ஔவை செந்தமிழில் வாழ்த்துகிறேன் உமை,


"நீர் வாழ்க வாழ்கவென்று"


நீலா

Saturday, September 3, 2011

எம் தமிழ் மொழியே !!!

தாயிற்கும் மேலான தமிழ் மொழியே,
தரணியில் வாழ்கின்ற முதுமொழியே,
தலை வணங்குகிறேன்- உன்
தாழ் பணிந்தே.



நீலா