Pages

Thursday, April 12, 2012

எனக்குள்ளே கேள்விகள் ???

இயற்கை கற்றுத்தந்ததா - எமக்கு 
இயலாமையை ?
இறைவன் கற்றுத்தந்தானா - எமக்கு 
பொறாமையை ?
குழந்தை கற்றுத்தந்ததா - எமக்கு 
கபட நாடகத்தை ?
குருவிக்கூட்டம் கற்றுத்தந்ததா - எமக்குள் 
 வேற்றுமையை ?

கற்றறிய வேண்டியவை பல இருந்தும் 
கண் பார்வையற்றவராய் நிதம் வாழ்வது ஏன் ?
உற்ற உயிர் உடலை விட்டு பிரிவதையே அறியாத 
 நிலையற்ற வாழ்வில் போலி வேடமும் ஏன் ?

ஆறறிவாம் பகுத்தறிவை பரமனவன் தந்தாலும்,
சிற்றறிவால் சிதறுண்டு - வாழ்வின் உயர் 
அர்த்தமத்தை அதர்மத்தால் அழிப்பதாலோ - நிதம் 
தர்மமே அள்ளுண்டு போகின்றதோ ... ???





நீலா

No comments:

Post a Comment